Saturday, April 11, 2009

தேர்தலில் வாக்களித்த வாக்காளப் பெருமக்களுக்கு நன்றி !!!!

மீண்டும் போட்டியிடுவேன்...... சரித்தரம் படைப்பேன்.

எந்த தேர்தலைப் பற்றி பேசுகிறேன் என்று குழப்பமா?
நாடாளுமன்றத் தேர்தலைப் பற்றி இல்லை. நமது சங்கமம் வலைப்பதிவின் சார்பாக நடத்தப்பட்ட கல்லூரி என்ற தலைப்பின் கிழ் தங்கள் படைப்புகளை எழுதிய நம் வலைப்பதிவு சிங்ககள் மோதிக்கொண்ட தேர்தலைப் பற்றி சொல்கிறேன்.

இந்த தேர்தலில் போட்டியிட்ட அனைத்து சிங்ககளுக்கும் வாக்களித்த எல்லா வாக்காளப் பெருமக்களுக்கு என் முதர்க்கண் நன்றினை தெருவித்து கொள்கிறேன். இந்த தேர்தலில் நான் deposit கூட பெறவில்லை (இரண்டாம் சுற்றுக்கு கூட நான் தகுதி பெறவில்லை) என்பது வேறு விசியம். என்னுடைய படைப்பும் உங்களை கவர்ந்து அதற்கு நீங்கள் வாக்களித்து இருப்பின் என் நெஞ்சார்ந்த நன்றியினை உங்களுக்கு தெருவிக்க கடமை பட்டுள்ளேன்.

"இளங்கன்று பயம் அறியாது" என்று நான் போட்டி கட்டுரையில் கூறியதுப் போல், இந்த தோல்வியின் இருந்தும் நான் பாடம் கற்று கொண்டுள்ளேன் என்பதில் எனக்கு மிகவும் சந்தோசம். என்னைப் போன்ற இளங்கன்றுகளை ஊக்குவிக்க சங்கமம் வலைப்பதிவு மீண்டும் தயார் என்று அறிவித்துள்ளது மேலும் ஒரு பிரசாதம். "இது எல்லாம் நமக்கு புதுசா பாஸ்.... போங்க பாஸ்" என்று நாமும் அதற்கு தயாராகிவிட்டோம்.

இந்நேரத்தில் வெற்றிப்பெற்ற ”வெட்டிப்பயல்” பாலாஜி, சத்யராஜ் குமார் மற்றும் ”பினாத்தல்” சுரேஷ் அவர்களுக்கு என் சார்பாகவும், வாக்காளப் பெருமக்கள் சார்பாகவும் வாழ்த்துக்களை பதிவுச் செய்க்கிறேன். அதேப் போல் வரும் நாடாளுமன்ற மன்ற தேர்தலிலும் அனைத்து நண்பர்களும் வாக்களித்து ஜனநாயகத்தை வெற்றிப் பெற செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

6 comments:

Suresh said...

/"இது எல்லாம் நமக்கு புதுசா பாஸ்.... போங்க பாஸ்"//

மச்சான் நம்ம எல்லாம் எதற்க்கு அசராத பசங்க ஹா :-) i liked ur attitude and post , follower ayuttaen

வெட்டிப்பயல் said...

வாழ்த்திற்கு மிக்க நன்றி பாஸ்...

தொடர்ந்து கலந்து கொள்ளவும். முயற்சி தான் முக்கியம்

நட்புடன் ஜமால் said...

\\இது எல்லாம் நமக்கு புதுசா பாஸ்.... போங்க பாஸ்\\

நாங்கள்ளாம் போட்டிக்கு அனுப்பாமலே கவருதையா இருந்துட்டோம்ல ...

சந்துரு said...

கலந்துரையாடிய உங்கள் அனைவருக்கும் நன்றி..

/* மச்சான் நம்ம எல்லாம் எதற்க்கு அசராத பசங்க ஹா :-) i liked ur attitude and post , follower ஆயுட்டேன் */

நிச்சயம் இதுக்கு எல்லாம் அசர ஆளா நாம :).... சகப் பயணி ஆனதற்கு மிக்க நன்றி.....


/* தொடர்ந்து கலந்து கொள்ளவும். முயற்சி தான் முக்கியம் */

கண்டிப்பாக.... முயற்சி உடையர் இகழ்ச்சி அடையார் என்று நம் முன்னோர்கள் சும்மாவா சொன்னார்கள்.... உங்கள் ஊக்கத்திர்க்கு மிக்க நன்றி

/* நாங்கள்ளாம் போட்டிக்கு அனுப்பாமலே கவருதையா இருந்துட்டோம்ல ... */

நான் நம்ம ஊரு அரசியல்வாதிகள் போல்... இதைப் பற்றி எல்லாம் கவலை படுவதில்லை.. மீண்டும் மீண்டும் போட்டியிடுவேன்..... உங்கள் விமர்சனங்களுக்காக :)

nila said...

அண்ணா... கலக்குற போ.... என் அண்ணனாச்சே நீ... இதுக்கெல்லாம் சாஞ்சுடுவோமா.... ஜமால் அண்ணா... நானும் உங்கள மாதிரிதானுங்கோ.... கலந்துக்காமயே கப்பு வாங்குவோமில்ல...

சந்துரு said...

/*அண்ணா... கலக்குற போ.... என் அண்ணனாச்சே நீ... இதுக்கெல்லாம் சாஞ்சுடுவோமா....*/

நிச்சயம் இதுக்கு எல்லாம் அசர ஆளா நாம :)....

/* ஜமால் அண்ணா... நானும் உங்கள மாதிரிதானுங்கோ.... கலந்துக்காமயே கப்பு வாங்குவோமில்ல... */

எந்த கப்பு.. காபி கப்பா? தண்ணி மொக்கர கப்பா?

Post a Comment