Friday, October 9, 2009

காதலுக்கு முன்(கா.மு)..... காதலுக்கு பின்(கா.பி).....


அன்றோ, பேசுவதற்கு நிறையுண்டு ,
கேட்பதற்கு என்னவள் என்று யாருமில்லை.
இன்றோ, கேட்பதற்கு என்னவளுண்டு ,
பேசுவதற்கு முடியவில்லை, அவசியமுமில்லை.

அன்றோ, காத்திருக்க நேரமுண்டு ,
காக்கவைக்க என்னவள் என்று யாருமில்லை.
இன்றோ, காக்கவைக்க என்னவளுண்டு,
காத்திருக்க முடியவில்லை, நேர்ந்தில்லை.

அன்றோ, கோபப்பட விருப்பமுண்டு,
ஊடல் செய்ய என்னவள் என்று யாருமில்லை.
இன்றோ, ஊடல் செய்ய என்னவளுண்டு,
கோபப்பட முடியவில்லை, விரும்பவுமில்லை.

அன்றோ, காதலிக்க ஆசையுண்டு
காதலிப்பார் யாருமில்லை.
இன்றோ, காதலிக்க கன்னியுண்டு,
தடைசெய்ய வேண்டியதில்லை, தேவையுமில்லை.