Wednesday, April 22, 2009

பல்லவனில் இருந்து பல்லவிக்கு

பல வருடங்களாக எங்கள் பால்க்காரர் சைக்கிள் மணிக்கு அசராத நான், அம்மாவின் காபி மணத்தில் மயங்காத நான்,பாட்டியின் கெஞ்சலுக்கு மனம் இறங்காத நான், அப்பாவின் திட்டுக்கு அஞ்சாத நான், சுற்றி நடக்கும் எதையும் பொருட்டாக கருதாத நான், இன்று காலை சூரியன் தன் பணி துவுங்கும் முன், சாலை வாகனத்தின் இரைச்சல் கேட்கும் முன் எழுந்தேன். இன்று என் வாழ்க்கையின் முக்கிய முடிவை எடுக்க வேண்டியத் தருனம். சீக்கிரம் புறப்பட்டு, இறைவனிடம் நல்ல முடிவை எடுக்கும் திறன் வேண்டிவிட்டு எங்கள் பகுதி பேருந்து நிறுத்தம் அடைந்தேன்.

எப்பொழுதும் பேருந்து நேரத்திற்கு சரியாக வரும் நான், இன்று அரை மணி நேரத்திற்கு முன்னதாகவே வந்துள்ளேன். ஒவ்வொரு நொடியும் ஒரு யுகமாக தோன்றியது. இந்த பேருந்து நிறுத்தமும், நான் பயணிக்கக் காத்திருக்கும் பேருந்தும் என் வாழ்க்கை பயணத்தில் ஒன்றாகக் கலந்து விட்டன. என் வாழ்க்கைப் பாதையை அசை போட ஆரம்பித்தேன். நான் இன்று ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியன். என்னிடம் நேற்றைய பேருந்து பயணத்தின் போது தன் காதலை வெளிப்படுத்திய ஒரு பெண்ணிற்கு என் பதிலைச் சொல்ல வேண்டும்.

நான்கு வருடங்களுக்கு முன், நான் வேலை செய்யும் கல்லூரியில் தான் என் இளநிலை பட்டப்படிப்பின் கடைசி வருடம் படித்து வந்தேன். அப்பொழுதும் இதே பேருந்தில் தான் என் பயணம். என் உறவுக்காரத் தங்கையின் தோழி, எங்கள் கல்லூரி கவி, என் கனவுக்கன்னி, கல்பனாவும் இதே வண்டியில் தான் வருவாள். அவள் முதலாம் ஆண்டு படித்து வந்தாள். அவளைப் பார்க்கவே நானும் நாள் தவறாமல் வந்து விடுவேன்.

இதே பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி, எங்கள் பயணத் தோழனாம் இந்தப் பேருந்தில் தான் தயங்கித் தயங்கி "எளிதில் தீப்பற்றும் பொருட்களை பேருந்தில் கொண்டு செல்ல தடை, ஆனால் உன்னை கண்ட உடன் பற்றிக்கொள்ளும் என் இதயத்தை நான் என்ன பண்ணுவது? உன்னை கல்லூரிக்கு பத்திரமாகக் கொண்டு விடும் பொறுப்பையே இந்த பேருந்து ஓட்டுனருக்கு நீ தந்தது போல் நான் கல்லறைக்கு செல்லும் வரை என்னை பத்திரமாகப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பையே உனக்கு தருக்கிறேன், ஏற்றுக் கொள்வாயா?", என்று அவளிடம் சொன்னேன்.
"என் வாழ்க்கை துணை தேர்ந்தெடுக்கும் பக்குவம் எனக்கு இப்ப இல்லை. படிப்பில் தான் தன் முழு கவனமும் இப்பொழுது" என்றாள். கொஞ்சம் நாகரிகமாக தனக்கு விருப்பமில்லை என்று சொல்லிவிட்டாள். இது அவள் மேல் இருந்த மதிப்பைக் கூட்டியது.

இதன் பின்னர் பல வழியில் நான் முயற்சித்தும் பயனில்லை. எனது மேற்படிப்பை முடித்து அதே கல்லூரியில் பேராசிரியர் ஆனேன். அப்பொழுது அவள் கடைசி வருடம் பயின்று வந்தாள். அவளுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு அமைந்தது. என் வேலை கண்ணியம் கருதி, தேவையானதை மட்டும் உரையாடி வந்தேன். அதே பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி இந்த ஆண்டு , எங்கள் பயணத் தோழனாம் இந்த பேருந்தில் அவள் தயங்கித் தயங்கி "பேருந்தில் நான் உங்கள் அருகே ஜன்னலோரம் அமர்ந்து பயணம் செய்ய வேண்டும். வாழ்க்கை முழுவதும்? " என்று இலை மறை காயாக தன் காதலை என்னிடம் சொன்னாள்.


இந்த வார்த்தை மூன்று வருடங்களுக்கு முன் நீ சொல்லி இருக்க கூடாதா? எத்தனை நாட்கள் இதற்காக ஏங்கி இருப்பேன். காலம் தாழ்த்தி சொல்லி விட்டாயே? உடைந்த கண்ணாடியை சேர்க்கப் பார்க்கிறாய். ஆனால் என் புத்தியில் அவள் காதலை ஏற்றால், நான் செய்யும் பணிக்கு களங்கம் வருமே என்று ஒரு போராட்டம் உருவானது. கடைசியில் என் மனதை அடக்கி அவளிடம் என் நிலையை விளக்கி அவள் காதலை நிராகரித்தேன்.

இப்பொழுது என் விட்டில் எனக்கு ஒரு பெண் பார்த்துள்ளனர். ஆனால் நேற்று பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி, கல்பனா எங்கள் பேருந்தில் வந்தாள். "சென்ற வருடம், நான் என் காதலை கூறிய பொழுது பணியைக் காரணம் காட்டி வேண்டாம் என்றீர்கள், இப்பொழுது நான் உங்கள் மாணவி இல்லை, ஆகையால் நான் உங்கள் மனைவியாக எந்த தடையும் இல்லையே?" என்று கேட்டாள். "நன்றாக யோசித்து தான் நான் இந்த முடிவு எடுத்துள்ளேன். நீங்களும் சிந்தித்து நல்ல ஒரு முடிவை நாளை சொல்லுங்கள்" என்று கூறி விட்டு சென்றாள்.


அவள் எடுத்த முடிவில் உறுதியாக உள்ளதும், அவள் என் மீது கொண்ட காதலும், அவளின் மேல் நான் கொண்ட காதலை மேலும் கூட்டியது. ஆனால் என் பெற்றோர் பார்த்துள்ள பெண்ணிற்கு என்ன பதில் சொல்ல முடியும் என்று என் புத்தி. மீண்டும் என் மனதுக்கும், புத்திக்கும் போராட்டம் உருவானது. முடிவு எடுக்க முடியாமல் திணறினேன். எங்கள் பேருந்து தெருமுனையில் திரும்புவதைக் கண்டு சுதாகரித்தேன்.

எனக்காக வழி மீது விழி வைத்து அவள் காத்திருந்தாள். அவளிடம் சென்று இம்முறையும் என்னால் நம் காதலை
உயிர்ப்பிக்க முடியாது என்று சொன்னேன். அவள் கண்களில் வழிந்த நீர் கடும் பாறையையும் உருகச் செய்யும். ஆனால் என் மனம் என்ற கல் பாறை உருகவில்லை எனென்றால் எப்பொழுதோ அதை அவளிடம் பண்டமாற்று செய்து விட்டேனே. அவள் பெற்றோர் மாப்பிளை பார்த்துள்ளத்தாக சொன்னாள். எல்லா காதலும் கல்யாணத்தில் முடிவதில்லையே என்று அவளை சமாதனம் செய்தேன்.

அன்று மாலை அதே பேருந்தில் என் பெற்றோர் பார்த்த பெண் வீட்டுக்குச் சென்றோம். எங்கள் இருவர் பெற்றோர் அளித்த காதல் பரிசு எங்கள் கல்யாண நிச்சயம் என்றும், என் காதலியின் குறும்பு விளையாட்டு தான் நேற்றும், இன்றும் நடைபெற்ற நாடகம் என்பதும் தெரிந்தது. நாங்களும் பரிசு அளித்தோம் அடுத்த வருடம் இதே பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி எங்கள் பெற்றோருக்கு எங்கள் பல்லவி( பல்லவன் திருத்தி பல்லவி என்று வைத்தோம்) மூலமாக.


பேருந்தை பற்றிய சில கவிதைகள்
------------------------------------------------------------------------
ஏழை பங்காளன் உற்ற தோழன் நீ...
சமுக விரோதிகளின் முதல் எதிரியும் நீ....
------------------------------------------------------------------------
உனக்குள் புகைப் பிடிக்க தடை...
சாலையில் புகைக் கக்க தடை இல்லை உனக்கு...
------------------------------------------------------------------------
மகளிர் மட்டும்... பயணிகளுக்கு மட்டுமே பொருந்தும்...
------------------------------------------------------------------------
மக்களின் தரம் பார்க்காத உன்னை...
தரம் பிரித்து விட்டனர் அரசியல் வியாதிகள்...
------------------------------------------------------------------------

சங்கமம் - போட்டிக்காக


9 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//எங்கள் இருவர் பெற்றோர் அளித்த காதல் பரிசு எங்கள் கல்யாண நிச்சயம் என்றும், என் காதலியின் குறும்பு விளையாட்டு தான் நேற்றும், இன்றும் நடைபெற்ற நாடகம் என்பதும் தெரிந்தது. நாங்களும் பரிசு அளித்தோம் //



சுபம்.......


வெற்றி பெற வாழ்த்துக்கள்

SUREஷ்(பழனியிலிருந்து) said...

என்ன பாஸ் அறிவிப்பு வருவதற்கு முன்பே கதையோடு இருந்திருப்பீங்க போல....

சந்துரு said...

// என்ன பாஸ் அறிவிப்பு வருவதற்கு முன்பே கதையோடு இருந்திருப்பீங்க போல.. //

தலைவா உங்கள மிஞ்ச முடியுமா... அறிவிப்பு வந்த உடன் இடுகை இட்டவர் அல்லவா நீங்கள்... :).. உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி...

Venkatesh Kumaravel said...

வெற்றி பெற வாழ்த்துக்கள்!
வலைப்பூ நல்லா இருக்குங்க... ஃபாலோ பண்றேன் பாஸ்!

வினோத் கெளதம் said...

Super..
நல்லா இருக்குங்க..

ப்ரியமுடன் வசந்த் said...

வாழ்த்துகள்

Suresh said...

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!

ச.பிரேம்குமார் said...

நல்லா இருக்கு சந்துரு. வாழ்த்துகள்

Anonymous said...

dey ennada venum unakku...
idhu yaaroda kathai...

beach'la sundal madikkara paper pinnaadi irundhadhai ellaam inga paste pannaa addi vaanguva...

sonthamaa kadhai ezhuthu inimey.. ippadi copy adikkarathellaam oru pozhappaa ?

Post a Comment