Wednesday, December 22, 2010

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்


என் உயிர் நண்பா....
இன்றோ உன் பிறந்தநாள். என் வாழ்வில் மறக்க விரும்பாத நாள்.
ஒரு கூட்டு பறவையாய் கூடிப் பழகிய நாட்கள் சிறிதெனினும்
சிறகுகள் கிடைக்க நான் இங்கு பறந்து வந்தாலும் ,
என் உயிரில் கலந்து நிற்பவன் நீ.

கால் நூற்றாண்டு காத்திருப்புக்குப் பின் கிடைத்த பொக்கிஷம் நீ.
என்னை கருவில் சுமந்தவளுக்கு பின் என் மனதில் நிறைந்தவன் நீ.
நான் கல்லறை சேரும் வரை காக்க விரும்பும் உறவு நீ.
பலருக்கு உலகத்தில் ஒருத்தன் நீ, எனக்கோ உலகமே நீ.

இன்று உன் விருப்பங்கள் நிறைவேற வாழ்த்துபவர் பலர்,
தினமும் உன் விருப்பங்கள் நிறைவேற வேண்டுபவன் நான்.
இன்று உன்னுடன் பழகிய நினைவுகளை அலசுவர் பலர்,
தினமும் உன் நினைவுகளுடன் வாழ்பவன் நான்.

வாழ்க்கை அனுபவங்கள் உன்னை மேலும் மெருகேற்றட்டும்.
பட்டை தீட்ட பட்ட வைரமாய் நீ மின்னுவாயாக.
நலம் வாழ எந்நாளும் இந்த நண்பனின் வாழ்த்துக்கள்!

Monday, November 15, 2010

ஞாபகங்கள்


















பிரிவுகளின் பாரத்தை மனதில் சுமந்து,
கனவுகளை நோக்கி பயணம் தொடர
மனதின் வாசலில் பழைய முகங்கள்,
பழைய ஞாபகங்கள் புயலாய் வீசுகின்றன.

கண்கள் குளிர காட்சிகள் பல கண்டாலும்,
என் கண்கள் முழுக்க உங்கள் பிம்பங்களே நிறைந்துள்ளன,
உங்கள் முகம் காண ஏங்குகின்றன.

காதுகள் இனிக்க பலர் பேசினாலும்,
நீங்கள் பேசிய வார்த்தைகள் மட்டும் திரும்ப திரும்ப ஒலித்துக்கொண்டு இருக்கின்றன,
உங்கள் குரல் கேட்க தவம் இருக்கின்றன்.

வாய்கள் வலிக்க நான் பேசினாலும்,
உங்களுடன் ஒரு வார்த்தை பேச துடிக்கின்றன.

வாழ்க்கை பாதை எங்கு சென்றாலும்,
நீங்கள் தான் என் வாழ்க்கை, உங்களிடம் தான் என் சந்தோசம் உள்ளது.
இலக்குகள் புதிது, பாதைகள் புதிது,
மனதில் உள்ள உங்கள் ஞாபகங்கள் என்றும் புதிது.

உங்கள் ஞாபகங்கள் என்னிடம் உள்ளவரை,
நம்மை யாரும் பிரிக்க இயலாது.
என் உயிர் உள்ளவரை,
உங்கள் ஞாபகங்களை மறக்கவும் இயலாது.

Saturday, October 2, 2010

என் இதய களவானி


அதிகாலை நீ எழுந்தவுடன் என் நெற்றியிலே
முத்தமிட வேண்டும்.
விடியலில் உன் மஞ்சள் முகம் கண்டு, நான்
கண்விழிக்க வேண்டும்.
உன் வாசம், என் சுவாசமாக வேண்டும்.
என் தலை சாய உன் மடிதந்து, என் தலைகோத உன் விரல் தந்து,
என் மார்பில் உன் தலை சாய,
அனைத்திட வேண்டும்.
உலகையே மறந்திட வேண்டும்.
கள்ளமில்லா உன் சிரிப்பிலே, கவலையை
மறந்திட வேண்டும்.
நாம் என்றும் பிரியாமல் இருக்க
வரம் வேண்டும்.
களவாடி சென்ற என் இதயத்தின் மாற்றாக, உன் இதயத்தை தர வேண்டும்.
இவை அனைத்துக்கும், என் மனைவியாய் நீ
வர வேண்டும்
இதற்கு நம் பெற்றோர் அனுமதி தர வேண்டும்

Sunday, August 1, 2010

நானும் + நீயும் = நாம்.


பொய்யாக உன்னை கோவிக்க
தெரிந்த எனக்கு,
மெய்யாக எதையும் மறைக்க
தெரியவில்லை உன்னிடம்.
என் உயிர் போக உன்னை என்னையும்
தொட்டு விடாத தூரத்தில் வைத்தான் காலன்,
என் உயிர் வாழ உன் நினைவுகளை
சுவாசிக்க கற்று கொண்டேன் நான்.
அழகான வார்த்தை திருடி
கவிதை எழுத தோன்றிய எனக்கு,
நம் நட்பு சிறையின் சாவியை
திருட தோன்றவில்லை எனக்கு.
இன்றோ,
உலகத்தில் ஒரு முனையில் நீ,
இன்னொரு முனையில் நான்,
ஆனால் என்றோ,
நீயும் நானும் நாமாகி போனோம்.
வாழும் வயது முடியும் வரை,
பிரிவு என்பது இனி என்றுமில்லை,
சந்தன காப்பாக நம் அன்புள்ளவரை.
இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

Monday, May 10, 2010

கல்வி கட்டணத்தை முறைப்படுத்தும் சட்டம் வெற்றி அடையுமா?

பள்ளிகளில் கல்வி கட்டணத்தை முறைப்படுத்தும் சட்டம் கடந்த ஆண்டு சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டது. அதன்படி சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி கே.கோவிந்தராஜன் தலைமையில் சுயநிதி பள்ளிகளுக்கான கட்டண நிர்ணயக் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு ஆய்வு நடத்தி, நடப்பாண்டுக்கான புதிய கல்வி கட்டணத்தை நிர்ணயித்துள்ளது.
இத்தகைய சட்டம் கொண்டு வந்தமைக்கு முதலில் என் பாராட்டுகளையும், மகிழ்ச்சியும் பதிவுசெய்கிறேன். இந்த கல்வி கட்டணத்தை முறைப்படுத்தும் சட்டம் வெற்றி அடையுமா? ஆனால் இந்த சட்டத்தை அமல்படுத்துவதில் நடைமுறை சிக்கல்கள், எதிர்ப்புகள் ஏராளம் என்பது அனைவரும் அறிவோம். பணம் படைத்த பள்ளி நிறுவன முதலைகள் பல இதை நடைமுறை படுத்துவதை தடுக்க தங்கள் பணத்தை பாதாளம் வரை செலவளிப்பர். வழக்கு, வாய்தா என்று நிச்சியம் இழுத்தடிப்பர். முன்பு பலர் மக்களுக்கு சேவை செய்ய கல்வி நிறுவனங்களை தொடங்கினர், இன்று பண பேராசை பிடித்து கல்வி நிறுவனங்களை தொடங்குவோர் எண்ணிக்கை தான் அதிகம். இதை எல்லாத்தையும் விட சட்டம் இயற்றும் நம் அரசியல்வாதிகள் பலர் கல்வி நிறுவன உரிமையாளர்கள் தான்.
இலவச தொலைகாட்சி பெட்டிகள், இலவச வீடு மனை, இலவச விவசாய நிலம் என்று தருவதில் பல லட்சம் கோடி செலவு செய்கிறது நம் அரசு, இது மக்களை சோம்பேறிகளாக்கி, அவர்கள் மூளை மழுங்கச் செய்யும். இதை விடுத்து அவர்களாகவே தங்களுக்கு தேவையானதை வாங்குவதற்கான மூலாதாரத்தை இலவசம் ஆக்க வேண்டும். அதில் முதலாவது கல்வி பொதுவுடமையாக்கி, அனைவர்க்கும் கிடைக்கச் செய்ய வேண்டும். இதை நிச்சயம் சாத்தியமே. வளர்ந்த நாடுகளிலும் இது சாத்தியம் ஆகும் பொழுது நம் நாட்டில் ஏன் முடியாது?
ஒருவேளை இதில் தனியார் பங்களிப்பு இருந்தால் தான் தரம் நன்றாக இருக்கும் என்று எண்ணும் பச்சத்தில், இப்பொழுது அமலாக்க முயலும் சட்டத்தில் மேலும் ஒரு திருத்தம் கொண்டு வந்து, அரசே பெற்றோரிடம் இருந்த கல்வி கட்டணம் வசூலிக்கும் பொறுப்பை ஏற்க வேண்டும். அரசு மூலம் மட்டுமே தனியார் பள்ளிகள் கட்டணம் வசூல் செய்ய முடியும்படி ஆக்கவேண்டும். இப்பொழுது உள்ள தொழில்நுட்பங்கள் முலம் இது சாத்தியமே. இதன் முலம் நிச்சியம் கல்வி வியாபாரம் ஆவதை தடுக்க முடியும்.

Saturday, April 3, 2010

தாய்க்கு பின் யாரோ?

என்னை அவர்கள் கருவறையில் சுமந்தது இல்லாமல், கண்ணை இமை காப்பது போல் என்னை பல வருடங்கள் அவர்கள் நிழலையே வளர்த்து விட்டார்கள் என் தாய். அவர்களை அடுத்து என் வாழ்க்கையில் யாரின் சுவுடுகள் அதிகம் பதிந்துள்ளது என்று சிந்திக்க தொடங்கினேன். ஒவ்வொரு நாளும் எத்தனையோ பேர் வந்த சுவடே தெரியாமல் சென்றுவிடுகின்றனர். "வந்தார், போனார்" என்று இல்லாமல், ஒரு சிலரே அவர்களின் எல்லையில்லா அன்பு, வற்றாத பாசம், உண்மையான அக்கறை காரணமாக என் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளனர்.
இன்றைய காலகட்டத்தில் தொப்புள் கோடி உறவுகள் நமக்கு தோள் கொடுப்பதே ஆச்சரியம் என்றால், எங்கோ பிறந்து, எங்கோ வளர்ந்து காலத்தின் கட்டாயத்தால் சேர்ந்து, அதே காலத்தின் கட்டாயத்தால் இன்று பிரிந்து இருந்தாலும் தோளுக்கு தோளாய் நம்முடன் இருக்கும் நண்பர்களின் உறவு என்னை மெய்சிலிர்க்க வைக்கின்றது. மற்ற எந்த உறவிடம் ஏற்படாத பிணைப்பு மற்றும் சுதந்திரம் இந்த உறவில் கிடைக்கின்றது. தாய், மனைவிடம் கூட பகிர்ந்து கொள்ள முடியாததை நண்பனிடம் பகிர்ந்து கொள்ள இயலும். பெருக்கெடுத்து ஓடும் நைல் நதி கூட வறண்டு விடலாம் ஒரு நாள், ஆனால் உண்மையான நட்பு என்றைக்கும் வற்றாத ஒரு ஜீவநதி.
நட்பின் தாக்கம் என்னை பள்ளி நாட்களில் தூறலாக, கல்லூரி நாட்களில் மழையாக, அதன் பின் இடியுடன் சேர்ந்து புயலாக என்னை தாக்கியது. நட்பின் பெருமை சிறிது காலம் கடந்தே நான் உணர்ந்தாலும், என் உயிர் உள்ளவரை என் உணர்வுகளில் கலந்திட்ட பல நண்பர்கள் கிடைத்தனர். "வீடு வரை உறவு, வீதி வரை மனைவி, காடு வரை பிள்ளை, கடைசி வரை யாரோ?" என்ற வரிகளை கடைசி வரை நண்பன் என்பதை மனதில் வைத்து எழுதினாரோ கண்ணதாசன் தெரியாது எனக்கு, ஆனால் என் வாழ்க்கையின் கடைசி அத்தியாயம் வரைக்கும் என் நண்பர்களின் நேசம் என் சுவாசமாக வேண்டும்.
காக்கைகள் பொறாமை கொண்டன நம் பகிரிந்துணர்வை கண்டு, சுமைதாங்கியும் பெருமைபட்டது நம் மற்றவர் துயரங்களை தோள் கொடுத்து சுமப்பதை கண்டு, தாய் பாசத்துக்கு போட்டியில்லை என்று எண்ணினர் நம் பாசபினைப்பை காணும் வரை, பெண்களின் மனதின் ஆழம் பெரியது என்று எண்ணினர் நம் நட்பின் ஆழத்தை காணும் வரை, சந்திரனும் கிறங்கி போனான் நம் நடுநிசை பிறந்தநாள் கொண்டாட்டத்தை கண்டு, மேகங்கள் இறங்கி வந்தன நம் சந்தோசத்தில் பங்கு கொள்ள. நட்புக்கு எல்லை கண்டதில்லை நாம், காணவும் விரும்பியதில்லை. காலன் வென்றான் நம்மை தனிமை படுத்துவதில், ஆனாலும் தோற்றான் இதனால் நம் நட்பு இம்மி அளவும் குறையாததால்.
உன்னை எல்லாம் பிரிந்து தொலைதூரத்தில் இருந்தாலும், நாம் பழகிய பசுமையான நினைவுகள் என் மனதில் தென்றலாய் என்றும் விசுகிறது. காரணம் எதுவுமின்றி உன்னை தொடர்பு கொள்கிறேன், காரணம் கிடைத்தால் உடனே தொடர்பு கொள்கிறேன். பிரிவு என்பது நம் கையில் தான் உள்ளது. "நண்பனே, உன்னை இவன் என் பழைய நண்பன் என்று அறிமுக படுத்தாமல், என் உயிர் நண்பன் இவன் என்று நான் கல்லறை செல்லும் வரை அறிமுகபடுத்த வேண்டும்" என்று இறைவனை எப்பொழுதும் வேண்டி கொள்கிறேன். கண்டிப்பாக நான் முயற்சி செய்வேன், உங்களை இழக்க தயராக இல்லை. நல்ல நட்பு என்பது எதவும் எதிர்பார்க்காமல் தருவதில் இரட்டிப்பாகுது.
"தாய்க்கு பின் தாரம்" என்பார்கள் நம் முன்னோர்கள், என்னை பொறுத்த வரை என் தாய்க்கு அடுத்து என் வாழ்வில் இரண்டுற கலந்து நிற்பவர்கள் என் நண்பர்கள். ஒரு கூட்டு பறவைகளாக காலம் கழித்த நம் கூட்டுக்கு சிக்கரம் திரும்பி வர வேண்டும் என் மனம் விரும்புகிறது.