Saturday, October 2, 2010

என் இதய களவானி


அதிகாலை நீ எழுந்தவுடன் என் நெற்றியிலே
முத்தமிட வேண்டும்.
விடியலில் உன் மஞ்சள் முகம் கண்டு, நான்
கண்விழிக்க வேண்டும்.
உன் வாசம், என் சுவாசமாக வேண்டும்.
என் தலை சாய உன் மடிதந்து, என் தலைகோத உன் விரல் தந்து,
என் மார்பில் உன் தலை சாய,
அனைத்திட வேண்டும்.
உலகையே மறந்திட வேண்டும்.
கள்ளமில்லா உன் சிரிப்பிலே, கவலையை
மறந்திட வேண்டும்.
நாம் என்றும் பிரியாமல் இருக்க
வரம் வேண்டும்.
களவாடி சென்ற என் இதயத்தின் மாற்றாக, உன் இதயத்தை தர வேண்டும்.
இவை அனைத்துக்கும், என் மனைவியாய் நீ
வர வேண்டும்
இதற்கு நம் பெற்றோர் அனுமதி தர வேண்டும்