Showing posts with label வாழ்த்து. Show all posts
Showing posts with label வாழ்த்து. Show all posts

Tuesday, March 30, 2010

முதன் முறையாய் நண்பனுக்கு

சென்ற ஆண்டில் கடவுள் எனக்கு அளித்த விலைமதிப்பில்லா இரு நண்பர்களின் ஒருவனுக்கு இன்று பிறந்தநாள். இது அவனுக்காக

இனிய நண்பா,

ஒவ்வொரு பிறந்தநாளிலும் உன்னை வாழ்த்துபவர் பலர்,
இனி அவர்களில் நானும் ஒருவன்.
வாழ்க்கை முழுவதும் உன்னுடன் பழகிய நினைவுகளை சுமந்திடுவர் சிலர்,
இனி அவர்களில் நானும் ஒருவன்.

அன்பு தோழா,

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
என்றும் இன்று போல்,
புன்னகையுடன் உன் வாழ்க்கை அமைய மனமார இறைவனை வேண்டிகொள்கிறேன்.
என்றும் இன்று போல்,
நம் இருவருக்கும் இடையே உள்ள நட்பு இம்மி அளவும் குறையாமல் வாழ்க்கை முழுவதும் தொடர இறைவனை பிராத்திக்கிறேன்.

Monday, March 8, 2010

100 வது உலக மகளிர் தின சிறப்பு இடுகை

இந்த உலகின் படைக்கும் கடவுள் பிரும்மா என்கிறது இந்து மதம். அது உண்மையா பொய்யா என்ற ஆராய்ச்சி நமக்கு இப்பொழுது வேண்டாம். ஆனால் ஆணோ, பெண்ணோ நம்மை இவ்வுலகுக்கு கொண்டு வர தங்கள் உயிரையே பணையம் வைக்கிறார்களே நம் நிஜ பிரம்மாக்கள் அவர்களுக்கு என் உள்ளம் கனிந்த மகளிர் தின வாழ்த்துக்களை உரித்தாக்குகிறேன்.
தாய்மாருகளுக்கு மட்டும் தான் நான் வாழ்த்து தெரிவித்துள்ளேன் என்று தவறாக புரிந்து கொள்ளவேண்டாம். ஆண்களை காட்டிலும் பெண்களை உயர்த்தி காட்டும் தகுதிகளில் முதன்மையானத்தை தான் மேலே குறிப்பிட்டேன். "மகளிராய் பிறப்பதற்கு மாதவம் செய்திடல் வேண்டும்" என்று பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நம் ஒளவை பெருந்தகை பாடியதை விட என்ன சான்று வேண்டும் பெண்களின் சிறப்பை எடுத்துரைக்க.
தாய்நாடு, தாய்மொழி இன்று எல்லாவற்றிலும் பெண்ணை, நம் முன்னோர் முதன்மை படுத்தியதில் இருந்து ஆதிக் காலத்தில் பெண்களுக்கு எவ்வளவு முக்கியத்துவும் தந்துள்ளனர் என்பது தெளிவாகும்.
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் தான் இந்த பெண் அடிமை தனம். இந்த உலகின் மிக கொடிய இந்த காளானை முளையிலையே கிள்ளி எரிய மறந்து விட்டனர் நம் முன்னோர். இது நடுவில் வந்ததே. இது அறுத்தெடுக்கும் பொறுப்பு நம்முடையதே. இது களைய பட்டு கொண்டு இருக்கிறது இப்பொழுது. நம் நாட்டின் ஜனாதிபதி, நாடாளுமன்ற சபாநாயகர், ஆளும் ஐக்கிய முன்னேற்ற கூட்டணி தலைவி என்று நாட்டின் முக்கிய பொறுப்புகளில் இப்பொழுது பெண்கள் உள்ளனர்.
ஆனால் வேகமாக களைய வேண்டும் அதுவும் முழுமையாக. அதற்கு ஏற்றார் போல் 100 வது உலக மகளிர் தினமாக இன்று நமது ராஜ்யசபாவில், லோக்சபா மற்றும் சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் மசோதா தாக்கல் செய்யப்படுகின்றது. இதை எதிர்க்கும் கட்சிகள் தயவு செய்து இதை இப்பொழுது நிறைவேற்றி விட்டு பிறகு உள் ஒதுக்கீடு பற்றி அலசி ஆராயட்டும். இன்னொரு அரசியல் சட்ட திருத்தம் செய்வது என்பது ஒன்று பெரிய விஷயம் இல்லை. நம் இந்திய பெண்களுக்கு மகளிர் தின பரிசாக இதை தர வேண்டும்.

Saturday, May 9, 2009

அம்மா உன்னை வணங்குகிறேன்.

தாயிற் சிறந்த கோவிலுமில்லை. அன்னைக்கு உதவாதவன் யாருக்கும் ஆகான்

நம்மைப் பல மாதங்கள் தன் கருப்பையில் தாங்கி, நம்மை ஈன்றெடுக்கும் அன்னை பற்றிய இடுகை தான் என் எழுத்துக்களின் முதல் மைல்கல் என நான் கருதுகிறேன். உற்றார் மற்றும் உறவினர்கள் புதிதாக தங்கள் வாழ்க்கையில் வந்துள்ள சிறு உயிரை கண்டு பேரானந்தம் கொள்ளுவதைப் போல் இந்த இடுகையைப் படித்து மகிழ்ச்சி கொள்ளவீர்கள் என்று நம்புகிறேன். அன்னையர் தினமான இன்று உங்களுடன் பகிர்ந்து கொள்வது இன்னும் அதிக படுத்தும் என்று நம்புகிறேன். அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள். அவளைப் பற்றி எழுத பேனா மை பத்தாது, காகிதங்கள் பத்தாது, வார்த்தைகளும் பத்தாது. எதோ கடுகு அளவு பகிர்ந்துக் கொள்ள உள்ளேன்.

குழந்தையை சுமக்கும் அந்த பேறு காலத்தில் அவள் படும் அவஸ்தைகள் தான் எத்தனை எத்தனை? பிரசவ நேரத்தில் மறுபிறப்பு அல்லவா எடுக்கின்றாள்? தன் உயிர் போனாலும் தன் குழந்தை இந்த உலகத்தில் ஜனிக்க வேண்டும் என்று விரும்பும் ஒரே உயிர் அவள் தானே? பிள்ளை முகம் கண்டவுடன் அனைத்தையும் மறந்து அணைத்துக் கொள்ளும் அன்பின் வடிவம். ஒரு பெண் தாயானவுடன் தான் முழு பெண்மணி ஆகிறாள் என்பார்கள், ஆனால் ஒரு பெண் தாயாகும் பொழுது இறைவனையும் தாண்டி ஒரு படி மேலே செல்கிறாள் என்பது என் கருத்து.

தாய்மொழி பேசத்தெரியாத தருணத்தில், நம் மழலை மொழி அறிந்தவள் அவளே. நடக்கத்தெரியாத தருணத்தில், நம்மை சுமந்து செல்லும் வாகனம் அவளே. எதுவும் தெரியாத தருணத்தில், நமக்கு கற்று கொடுக்கும் முதல் ஆசானும் அவளே. உறவே தெரியாத தருணத்தில், நம் உறவுகளை அறிமுக படுத்தும் முதல் உறவும் அவளே. நம் வாழ்க்கையின் ஆணி வேரும் அவளே. நம் விழியோரம் சிறு துளி நீர் வழிந்தால் அவள் நெஞ்சம் பொருத்ததில்லையே. அம்மா எனப்படுபவள் தியாகத்தின் திருவுருவம்.

எதுவும் அருகில் உள்ள பொழுது அதன் அருமை தெரியாது, விலகி இருக்கும் பொழுது தான் நமக்கு தெரியும். எனது தாயின் ஸ்பரிசத்தை அருகில் இருந்து அனுபவிக்க முடியவில்லை என்றாலும், எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாத தன் பிள்ளைகளின் நலனை மட்டுமே நினைக்கும் ஜீவன் அல்லவா அவள். நம் உருவம் தெரியாமல் இருக்கும் பொழுது நம்மை நேசிக்க ஆரம்பிக்கும் அவள் தன் உயிர் போகும் வரை அந்த பாசம், அன்பு இம்மி அளவும் குறைவதில்லை. நம் உயிர் உள்ளவரை அவளின் நினைவுகள் நம் நெஞ்சில் நிறைந்திருக்கும்.

அம்மா என்ற அந்த முன்று எழுத்து மந்திரம் தரும் சுகம் மற்ற எதனால் தர இயலும்? பாசப் பிணைப்புகளிலேயே மிக மிக வலுவான பிணைப்பு ஒரு தாய்க்கும் குழந்தைக்கும் இடையிலான பிணைப்பாகும். நாம் நம் தாய்மேல் இருக்கும் பாசத்தைவிட, அவள் நம் மேல் வைத்திருக்கும் பாசம் பல மடங்கு அதிகமானது, பலமானது. அவள் எதை இழந்தாலும் தன் குழந்தைகளை மட்டும் இழக்கச் சம்மதிக்க மாட்டாள். நமக்கு குழந்தை பிறந்தாலும், நாம் எப்பொழுதும் அவளுக்கு குழந்தையே.

"எவன் ஒருவன் தாய் தந்தையருக்கு தேவையானவற்றை கொடுத்து மனம் நோகாமல் வைத்திருக்கனோ அவன் தினம் தினம் கங்கையில் குளித்தற்கு சமம். ஆக தினம் தினம் பாவத்தை கழுவி புனியத்தை அடைந்தவன். ஆகையால் இந்த உலகத்தில் தாய் தந்தையருக்கு நிகரான கடவுள் உலகில் இல்லை. தாய் தந்தையாரை கவனிக்காமல் எந்த கோவிலுக்கு சென்று பரிகாரம் செய்தாலும் என்ன தானம் செய்தாலும் புண்ணியம் கிடைக்காது" என்கிறது இந்து மதம். இதே போல் கிறிஸ்தவம், இஸ்லாம் மற்றும் இதர மதங்களும் இதையே போதிக்கின்றனர். இந்த அவசர உலகின் உங்கள் வாழ்க்கை தூண்களான உங்கள் பெற்றோரை போற்றி வணங்கா விட்டாலும், அவர்கள் மனம் நோகாமல் நடுந்து கொள்ளுங்கள். அவர்கள் உங்களிடம் செலுத்திய அன்பில் ஒரு சிறு பகுதியாவது திருப்பி கொடுங்கள்.

இன்னொரு ஜன்மம் என்று ஒன்று உனக்கு இருப்பின், அதில் நீ எனக்கு மகளாய் பிறக்க வேண்டும், நீ எனக்கு கொடுத்த, கொடுத்துக் கொண்டு இருக்கும், கொடுக்க போகும் அனைத்துக்கும் ஓரளவாவது திருப்பி தர வேண்டும் நான். இன்னொரு ஜன்மம் என்று ஒன்று எனக்கு இருப்பின், மீண்டும் உன் கருவறையில் உயிர் பெற வேண்டும். என் அன்னைப் போன்று இந்த உலகில் வாழும் அனைத்து அம்மாகளுக்கும் இந்த இடுகை சமர்ப்பணம்.

Saturday, April 11, 2009

தேர்தலில் வாக்களித்த வாக்காளப் பெருமக்களுக்கு நன்றி !!!!

மீண்டும் போட்டியிடுவேன்...... சரித்தரம் படைப்பேன்.

எந்த தேர்தலைப் பற்றி பேசுகிறேன் என்று குழப்பமா?
நாடாளுமன்றத் தேர்தலைப் பற்றி இல்லை. நமது சங்கமம் வலைப்பதிவின் சார்பாக நடத்தப்பட்ட கல்லூரி என்ற தலைப்பின் கிழ் தங்கள் படைப்புகளை எழுதிய நம் வலைப்பதிவு சிங்ககள் மோதிக்கொண்ட தேர்தலைப் பற்றி சொல்கிறேன்.

இந்த தேர்தலில் போட்டியிட்ட அனைத்து சிங்ககளுக்கும் வாக்களித்த எல்லா வாக்காளப் பெருமக்களுக்கு என் முதர்க்கண் நன்றினை தெருவித்து கொள்கிறேன். இந்த தேர்தலில் நான் deposit கூட பெறவில்லை (இரண்டாம் சுற்றுக்கு கூட நான் தகுதி பெறவில்லை) என்பது வேறு விசியம். என்னுடைய படைப்பும் உங்களை கவர்ந்து அதற்கு நீங்கள் வாக்களித்து இருப்பின் என் நெஞ்சார்ந்த நன்றியினை உங்களுக்கு தெருவிக்க கடமை பட்டுள்ளேன்.

"இளங்கன்று பயம் அறியாது" என்று நான் போட்டி கட்டுரையில் கூறியதுப் போல், இந்த தோல்வியின் இருந்தும் நான் பாடம் கற்று கொண்டுள்ளேன் என்பதில் எனக்கு மிகவும் சந்தோசம். என்னைப் போன்ற இளங்கன்றுகளை ஊக்குவிக்க சங்கமம் வலைப்பதிவு மீண்டும் தயார் என்று அறிவித்துள்ளது மேலும் ஒரு பிரசாதம். "இது எல்லாம் நமக்கு புதுசா பாஸ்.... போங்க பாஸ்" என்று நாமும் அதற்கு தயாராகிவிட்டோம்.

இந்நேரத்தில் வெற்றிப்பெற்ற ”வெட்டிப்பயல்” பாலாஜி, சத்யராஜ் குமார் மற்றும் ”பினாத்தல்” சுரேஷ் அவர்களுக்கு என் சார்பாகவும், வாக்காளப் பெருமக்கள் சார்பாகவும் வாழ்த்துக்களை பதிவுச் செய்க்கிறேன். அதேப் போல் வரும் நாடாளுமன்ற மன்ற தேர்தலிலும் அனைத்து நண்பர்களும் வாக்களித்து ஜனநாயகத்தை வெற்றிப் பெற செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.