Sunday, August 1, 2010

நானும் + நீயும் = நாம்.


பொய்யாக உன்னை கோவிக்க
தெரிந்த எனக்கு,
மெய்யாக எதையும் மறைக்க
தெரியவில்லை உன்னிடம்.
என் உயிர் போக உன்னை என்னையும்
தொட்டு விடாத தூரத்தில் வைத்தான் காலன்,
என் உயிர் வாழ உன் நினைவுகளை
சுவாசிக்க கற்று கொண்டேன் நான்.
அழகான வார்த்தை திருடி
கவிதை எழுத தோன்றிய எனக்கு,
நம் நட்பு சிறையின் சாவியை
திருட தோன்றவில்லை எனக்கு.
இன்றோ,
உலகத்தில் ஒரு முனையில் நீ,
இன்னொரு முனையில் நான்,
ஆனால் என்றோ,
நீயும் நானும் நாமாகி போனோம்.
வாழும் வயது முடியும் வரை,
பிரிவு என்பது இனி என்றுமில்லை,
சந்தன காப்பாக நம் அன்புள்ளவரை.
இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.