Wednesday, December 22, 2010

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்


என் உயிர் நண்பா....
இன்றோ உன் பிறந்தநாள். என் வாழ்வில் மறக்க விரும்பாத நாள்.
ஒரு கூட்டு பறவையாய் கூடிப் பழகிய நாட்கள் சிறிதெனினும்
சிறகுகள் கிடைக்க நான் இங்கு பறந்து வந்தாலும் ,
என் உயிரில் கலந்து நிற்பவன் நீ.

கால் நூற்றாண்டு காத்திருப்புக்குப் பின் கிடைத்த பொக்கிஷம் நீ.
என்னை கருவில் சுமந்தவளுக்கு பின் என் மனதில் நிறைந்தவன் நீ.
நான் கல்லறை சேரும் வரை காக்க விரும்பும் உறவு நீ.
பலருக்கு உலகத்தில் ஒருத்தன் நீ, எனக்கோ உலகமே நீ.

இன்று உன் விருப்பங்கள் நிறைவேற வாழ்த்துபவர் பலர்,
தினமும் உன் விருப்பங்கள் நிறைவேற வேண்டுபவன் நான்.
இன்று உன்னுடன் பழகிய நினைவுகளை அலசுவர் பலர்,
தினமும் உன் நினைவுகளுடன் வாழ்பவன் நான்.

வாழ்க்கை அனுபவங்கள் உன்னை மேலும் மெருகேற்றட்டும்.
பட்டை தீட்ட பட்ட வைரமாய் நீ மின்னுவாயாக.
நலம் வாழ எந்நாளும் இந்த நண்பனின் வாழ்த்துக்கள்!

1 comment:

பாரி தாண்டவமூர்த்தி said...

தங்களைப்பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். நேரம் இருக்கும் போது வந்து பார்க்கவும்...

அன்புடன்
பாரி தாண்டவமூர்த்தி

http://blogintamil.blogspot.com/2011/03/1.html

Post a Comment