Saturday, February 20, 2010

மீண்டும் ஒரு முறை

நான் கடைசியாக உங்களுடன் என் உணர்வை பகிரிந்து மாதங்கள் பல கடந்துவிட்டன. வெளிநாடு வந்தால் தான் எங்கள் நியாபகம் வருமா? என்று நீங்கள் கேட்ப்பிர்கள். நான் உங்களை எப்பொழுதும் மறந்தது இல்லை. ஆனால் இந்தயாவில் இருக்கும் பொழுது நேரம் ஏதோவது ஒரு வகையில் கழிந்துவிடுகிறது.

அதற்காக வெளிநாடு வந்தவுடன் நான் நேரத்தை சிக்கனமாக, முறையாக பயன்படுத்துகிறேன் என்று சொல்ல முடியாது. இங்கு நான் வரும் பொழுதெல்லாம் பனி காலத்தில் வருகிறேன். அதுவும் பனி அதிகம் வையும் நாடுகளுக்கே வருகிறேன். அதனால் வெளிய போக ஒரு jerkin, குல்லா, thermal wear இப்படி எல்லாம் இல்லாம போக முடியல. போனாலும் எப்ப வீட்டுக்குபோவோம்? என்ற மனநிலை ஏற்படுத்திகிற குளுரு.

பனி நமக்கு காண கிடைக்காத ஒன்று என்பதால் சில நாட்கள் ஒரு பரவசம். ஆனால் பிறகு அதுவே நமக்கு கசக்க ஆரம்பித்து விடுகிறது. "அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு" என்று சும்மாவா சொன்னார்கள் நம் முன்னோர். விட்டுக்கு வந்தா மட்டும் என்ன செய்கிறோம்? பெரிதாக ஒன்றும் இல்லை.

சமையல் செய்து சாப்பிடுவது, இன்டர்நெட்டில் படம் பார்ப்பது, ஆன்லைன் உள்ள நண்பர்களுடன் பேசுவது இப்படி என்ன செய்தாலும் கண்டிப்பாக உங்களுடன் பகிரிந்து கொள்ள நேரம் கிடைத்து விடுகிறது. ஆகையால் மீண்டும் ஒரு முறை என்னுடைய பயணத்தை ஆரம்பிக்கிறேன் உங்களுடன்.

எப்பொழுதும் போல் என் எழுத்துப்பிழைகளை மன்னித்து, என் கிறுக்கலின் மீதான உங்கள் கருத்துகளை பதிவு செய்ய மறந்து விடாதீர்கள். நன்றி.